ஆர்எஸ்எஸ் நிர்வாகி படுகொலை எதிரொலி.. கேரள முதல்வரின் கொடும்பாவி எரிப்பு
ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் படுகொலையைக் கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கடந்த வாரம் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கேரளா முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை இந்து அமைப்புகள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், கேரளாவில் நடந்து வரும் அரசியல் படுகொலைகளை கண்டித்தும் களியக்காவிளையில் நேற்று மாலை இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை தாங்கினார். தென் கேரள ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் பத்மகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பாஜக மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரித்து கோஷம் எழுப்பினர். மேலும் களியக்காவிளை பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற 2 அரசு பஸ்களையும் அவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உருவப் பொம்மையில் எரிந்த தீயை அணைத்து அதனை கைப்பற்றினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கேரள அரசு பஸ்களை மீட்டு திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்து அமைப்பினரின் போராட்டத்தால் களியக்காவிளையில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த போராட்டங்கள் குறித்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் கங்காதரன், மாவட்ட தலைவர் மிசா சோமன், பாஜக கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், தென் கேரள ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் பத்மகுமார், பி.எம்.எஸ் மாவட்ட செயலாளர் வினோத் குமார் உள்பட 405 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications