ஆடிட்டர் ரமேஷ் கொலை: சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு– சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
டெல்லி: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஜூலை 19-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருகிறது. இந் நிலையில், ரமேஷின் நண்பர் மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மனு தாக்கல் செய்தார். அதில் "ரமேஷ் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து மதம் சார்ந்த தலைவர்களைக் குறிவைத்து படுகொலைகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்குள்ள அச்சுறுத்தலை அறிந்த பிறகும் தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. அதனால்தான் ரமேஷ் உயிரிழக்க நேர்ந்தது. எனவே, இவ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என்று மனோகரன் கோரியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபரில் மனோகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, ரமேஷ் கொலை தொடர்பாக "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் உள்ளிட்டோரை தமிழக சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.
இத் தகவலை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மாதம் குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு பிறப்பித்த செவ்வாய்கிழமையன்று பிறப்பித்த உத்தரவு:
"ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாக சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகக் குற்றப்புலனாய்வு காவல் துறை இவ் வழக்கை விசாரித்து வருகிறது.
இச் சூழலில் இவ் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அதனால்தான் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணை முழுமையாக முடிவடையும்போது, அதில் மனுதாரருக்குத் திருப்தி ஏற்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அமைப்பை (சென்னை உயர் நீதிமன்றம்) அவர் மீண்டும் அணுகி நிவாரணம் பெறலாம். எனவே, தற்போதைய நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்கிறோம்' என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications