கப்பர் சிங், மல்கான் சிங், பூலான் தேவி.. சம்பல் பள்ளத்தாக்கு வாக்காளர் பட்டியலில் 2000 கொள்ளையர்கள்
போபால்: கொள்ளையர்கள், கொலைகாரர்கள் என சட்டம் சொன்னாலும், சிலரை இன்னமும் தெய்வமாக, தலைவர்களாக பாவிக்கும் மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதற்கு மத்தியப்பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கு ஒரு சாட்சியாகும்.
அங்குள்ள வாக்காளர் பட்டியலில் சட்டத்தால் குற்றவாளிகளாக குறிப்பிடப்படும் பெயரில் மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1950-70ம் ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் பூலான் தேவியைப் போன்றவர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அவர்களை சம்பல்காட்டு கொள்ளைக்காரர்கள் என மக்கள் அழைத்தனர்.
பல்வேறு சம்பவங்களால் அவர்கள் எல்லாம் அழிந்து விட இன்னமும் அவர்களது பெயர்களை தங்களது பிள்ளைகளுக்குச் சூட்டி வருகின்றனராம் அப்பகுதி மக்கள்.
சம்பல் கொள்ளையர்கள்....
குதிரையில் துப்பாக்கியுடன் வந்து கிராமங்களை சூறையாடுவது, வனவிலங்குகளை வேட்டையாடி கடத்துவது, காட்டில் பதுங்கி வாழ்வது என நாடு முழுவதும் சம்பல் கொள்ளையர்கள் பற்றிய பீதி கிளப்பும் கதைகள் சொல்லப் பட்டு வருகின்றன.
பூலான் தேவி....
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பூலான்தெவி, மல்கான் சிங், கப்பர் சிங், தாகாய்ட் மன்சிங், தாத்வூ ஆகியோர் ஆவர்.
தெய்வமாகக் கொண்டாடும் மக்கள்...
இவர்கள் கொள்ளை, கொலையில் ஈடுபட்டாலும், சம்பல் கொள்ளையர்கள் தங்கள் சாதி, மதத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நன்மைகளையும் செய்துள்ளனர் என்பது இன்றும் அவர்களை தெய்வமாக மதிக்கும் மக்களால் அறிந்து கொள்ள முடிகிறது.
233 பூலான் தேவிகள்...
இதனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியல். அதன்படி, சம்பல் பகுதி வாக்காளர் பட்டியலில் 904 கப்பர் சிங்குகளும், 578 மல்கான் சிங்குகளும், 233 பூலான் தேவிகளும், 218 தாத்வூக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications