மதுரா கலவரம் பற்றி வாய் திறந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்! உ.பி. அரசின் மெத்தனம் பற்றி வியப்பு
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை, நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை வெடித்தது. இதில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
மதுராவில் தற்போது, படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நீதி விசாரணையும் தொடங்கி உள்ளது.

இந்த வன்முறை குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரையில் மவுனம் காத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை கவலை அளிக்கிறது. நீண்டகாலமாக அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்ததும், அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் இருந்ததும் வியப்பாக உள்ளது.
இத்தனை வருடங்களாக உத்தர பிரதேச அரசு ஏன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த நடவடிக்கையை முதலிலேயே எடுத்திருந்தால் கலவரமே வந்திருக்காது.
பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கிற்கு, நாடு முழுவதும் பாராட்டு கிடைத்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களை மதுவிலக்கை அமல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications