ஓவரா உப்பு சேர்த்துகிட்டா மானம், ரோசத்தோட இதய நோயும் வருதாம்... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
லண்டன்: உணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி சுமார் 17 லட்சம் மக்கள் பலியாவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என சொல்லி வைத்தவர்கள் தான், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்றார்கள். இது உப்பிற்கும் பொருந்தும். நாள்தோறும் உடலின் தேவைக்கு அதிகமான உப்பைச் சேர்த்துக் கொள்வதால் இதய நோய் உண்டாவதாக ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உணவில் அதிக உப்பை சேர்த்துக் கொள்ளும் 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.

2கி உப்பு போதும்...
உலக சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பை உணவில் சேர்த்து கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது என பரிந்துரைத்துள்ளது.

2 மடங்கு அதிகம்...
ஆனால், தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாக உப்பை மனிதர்கள் உணவில் சேர்த்துக் கொள்வதாக இந்த ஆய்வு கூறுகிறது.

3.95கி...
அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு மனிதர்கள் 3.95கிராம் உப்பை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் அதிக இதயப் பிரச்சினைகளுக்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது.

வேலைப்பளு...
அதிக சோடியம் உடலில் சேர்வதால் இதயத்தின் மீதான வேலைப்பளு அதிகரிக்கிறது. இதனால் விரைவாக இதய நோய்த் தாக்கம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மரண விகிதாச்சாரம்...
அதிக உப்பினால் இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 61.9 சதவீதம் ஆண்கள், 38.1 சதவீதம் பெண்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியர்கள்...
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், இந்தியாவின் நகரங்களில் வாழ்பவர்கள் நாளொன்றிற்கு 7.6கி உப்பை எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம்...
அளவுக்கதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் நான்கில் ஒரு இந்தியர் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதாகவும், ஒருவர் இதய நோயால் பாதிக்கப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பின்விளைவுகள்...
இவ்வாறு அதிகளவு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதென்பது புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளுக்குச் சமமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.

அதிகசோடியம்...
உலகளவில் ஏற்படும் ஐந்து மரணங்களில் நான்கு உடலில் அதிகளாவு சோடியம் சேர்வதாலேயே ஏற்படுவதாகவும், அதிலும் குறிப்பாக வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளிலேயே இம்மரணங்கள் அதிகளவு நடப்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications