இந்த வருஷம் "புலி ஆண்டு.." நியூ இயரை கொண்டாட கோலாகலமாக ரெடியான சீனா!
பீஜிங்: சீனாவில் வசந்தகால புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறார்கள் சீன மக்கள்.
சீன நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்க கொண்டாட்டங்கள் நடக்கும். அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.
பூமியைச் சுற்றும் நிலவின் கோளப்பாதையின் படி சீனாவில் புத்தாண்டு தீர்மானிக்கப்பட்டு, அதன்படி கொண்டாடப்படுகிறது.

புத்தாண்டு
அதன்படி, இந்த வருடம் சீனப் புத்தாண்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தைக் கொண்டு மக்கள் கொண்டாடுவார்கள். அதன்படி, அடுத்த ஆண்டு புலி ஆண்டு. இந்த புலி வடிவம் மக்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று சீனர்கள் கருதுகிறார்கள். புலி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளனர்.

பயணம்
சீன புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 17- ஆம் தேதி முதல் பிப்ரவரி இறுதி வரை நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் சீனா முழுவதும் பயணம் செய்வார்கள். பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்தங்களை சந்திப்பார்கள். இதனால் சீனாவில் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

திண்பண்டம்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான தின்பண்டங்கள் தயாரிக்கும் பணிகளும் களைகட்டியுள்ளன. சந்திர புத்தாண்டை வரவேற்கும் விதமாக, கடந்த ஆண்டு ஓலாங் தேசிய பூங்காவில் பிறந்த 20 பாண்டா குட்டிகள் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது பாண்டா குட்டிகள் நடத்திய சேட்டைகள் காண்போரை அவற்றின் மீது காதல் கொள்ள வைத்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்காமல் இருக்க சீன அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதே நேரத்தில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications