செவ்வாய் கிரக மண்ணில் தாவரம் வளர்க்கலாம்... மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்து உள்ளனர்.

பால்வெளி, அங்குள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் துணைக் கிரகங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்கென பல விண்கலங்கள் விண்ணில் ஏவப் பட்டுள்ளன.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தாவரங்கள், குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து டச்சு பல்கலைகழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

சோதனை....

சோதனை....

செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது.

50 நாட்கள் ...

50 நாட்கள் ...

இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.

ஆச்சர்யம்... ஆனாக், உண்மை

ஆச்சர்யம்... ஆனாக், உண்மை

ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன.

எரிமலை மண்....

எரிமலை மண்....

இது போல அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+