Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க மறுக்கா சொல்லு.. கலாய்த்த ரோகித் சர்மா, கிச்சு கிச்சு மூட்டிய ரிஷப் பந்த்! டாஸ் போடும்போது ஜாலி

Subscribe to Oneindia Tamil

சார்ஜா: ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடையே டாஸ் போடும்போது நடந்த கலாட்டா ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டது.

சார்ஜாவில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வழக்கம்போல முதலில் டாஸ் போடப்பட்டது. அப்போது ரிஷப் பந்த், டெயில் என்று சொன்னார். பூதான் விழுந்தது. இதையடுத்து, வர்ணனையாளரிடம், நாங்கள் முதலில் பவுலிங் செய்ய உள்ளோம் என்பதை ஆங்கிலத்தில் We're going to bowl first என்று கூறினார்.

டாஸ் போடும்போது கலாட்டா

டாஸ் போடும்போது கலாட்டா

பவுல் என்பது ஹிந்தியில் உள்ள போல்.. என்ற வார்த்தையின் உச்சரிப்பை போன்றுதான் இருக்கும். அதுவும் ரிஷப் பந்த் கூறியது கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. மேலும், யாரை பந்து வீச ரிஷப் அழைக்கிறார் என்பதும் ரோகித்துக்கு சற்று குழப்பமாக இருந்தது. எனவே, ரோகித் ஷர்மா, உடனே ரிஷப் பந்த்தை பார்த்து, Can you போல்.. என்று தன்னை பார்த்து கையை காட்டினார். அதாவது, என்னிடத்தில் சொல்ல முடியுமா என்றார். உடனே சுதாரித்துக் கொண்டு புரிந்து கொண்ட ரிஷப் பந்த், We're going to bowl first.. என்று ரோகித்திடமும் கூறிவிட்டு அவரது இடுப்பில் கை வைத்து கிச்சு கிச்சு மூட்டியபடி நடந்து சென்றார். உடனே ரோகித் சர்மா, "ஐ லைக் திஸ்" என்று சிரித்தபடி கூறினார்.

ஜாலி, ஜாலி

ஜாலி, ஜாலி

ஐபிஎல் அணிகளுக்கு இடையே மைதானத்தில் மோதல் இருந்தாலும், இந்திய அணிக்காக விளையாடும் இவ்விரு வீரர்களும் ஜாலியாக டாஸ் போட்டு பேசிக் கொண்டிருந்ததை இரு அணி ரசிகர்களும் ரசிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

சார்ஜா மைதானம்

சார்ஜா மைதானம்

ரோகித் சர்மா டாஸ் வெற்றி பெற வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டிருப்பார் போலும். ஏனெனில், சார்ஜா மைதானம் ரொம்பவே ஸ்லோ பிட்ச். எனவே, இரண்டாவது பந்து வீசும்போது பந்து மெதுவாகத்தான் வரும். முதல் 10 ஓவர்கள் முடியும்போதே அப்படித்தான் ஆகிவிடும் வாய்ப்பு உள்ளதாம். எனவே 2வது பேட்டிங்கின்போது இன்னும் மெதுவாகத்தான் பந்து வரும்.

Recommended Video

    Kieron Pollard becomes first player in T20 cricket to aggregate 300 wickets, 10,000 runs
    ரோகித் பேட்டி

    ரோகித் பேட்டி

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், பேட்டிங் எடுப்பதா பவுலிங் எடுப்பதா என்று இரு மன எண்ணத்தில்தான் இருந்தேன். இங்கு முதலில் பேட் செய்த அணிகள் கூட சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளன. எனவே ஸ்கோரை அதிகரிப்பதுதான் முக்கியம். 2வது பவுலிங் செய்தாலும் பிரச்சினை இல்லை என்றார்.

    மும்பை அணி

    மும்பை அணி

    அதேநேரம், பேட்டிங்கின்போது ரோகித் சர்மா, டிகாக் உள்ளிட்ட இரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் விரைவாக ஆட்டமிழந்து விட்டனர். டெல்லி அணியின் ஆவேஸ்கான் சிறப்பாக பந்து வீசி ரோகித் விக்கெட்டை காலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+