பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் மீது நடந்த தற்கொலை படை தாக்குதலில் 24 பேர் சாவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்-ஈரான் நாட்டு எல்லையில் ஷியா முஸ்லிம்கள் மீது சன்னி இஸ்லாமிய பிரிவு தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 24 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஈரான் நாட்டு எல்லையில் பாகிஸ்தானுக்கு உட்பட்ட தப்டான் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த தீவிரவாத குழு ஒன்று தற்கொலை படை தாக்குதலை நடத்தியது. அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர். இதில், தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகள் உட்பட 24 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர், அதில் 14 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்ததும் ஆறு ஹெலிகாப்டர்களில் விரைந்த மீட்பு குழுவினர் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு குவெட்டா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தன.
தாக்குதலுக்கு சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
சம்பவம் நடந்த ஹோட்டலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அடுத்தடுத்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. ஷியா பிரிவு முஸ்லிம்கள் பலோசிஸ்தான் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பலோசிஸ்தான் மாகாண முதல்வர் அப்துல் மாலிக் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார். இன்று காலையில்தான் கராச்சியில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பலரை கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications