திமுக குழு அமைக்கும்னு 36 நாட்களாக காத்திருக்கிறோம்.. கொந்தளிக்கும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
மதுரை: திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கும் என்று 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தோழமை கட்சிகளுக்கு மரியாதை அளிப்பதாக 36 நாட்களாக காத்திருப்பதாக கூறிய மாணிக்கம் தாகூர், பேச்சுவார்த்தை குழு அமைத்த பின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தலைமை இன்னும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழுவையே அமைக்காமல் இருக்கிறது. டிசம்பர் மாதத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது குழு அமைப்பதாக ஸ்டாலின் கூறி இருந்தார்.

தாமதம் செய்யும் திமுக
ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்னரும் திமுக தலைமை இன்னும் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் இருக்கிறது. இருப்பினும் கூட்டணி கட்சிகளுடன் திமுக சீனியர் நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் தொகுதி பங்கீட்டு குழுவை அமைக்க திமுக வேண்டுமென்றே தாமதம் செய்து வருவதாக பார்க்கப்படுகிறது.
மாணிக்கம் தாகூர் பேட்டி
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை. எல்&டி நிறுவனம் விரைவில் கட்டுமான பணிகளை முடிப்பேன் என்று கூறி இருக்கிறார்கள்.
திமுக பேச்சுவார்த்தை குழு
அதேபோல் டிசம்பர் 3ஆம் தேதியே தமிழக காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 36 நாட்களாக திமுக குழு அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. குழு அமைத்த பின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம். நாங்கள் திமுக கூட்டணியுடன் பயணித்து வருகிறோம்.
மரியாதை முக்கியம்
திமுக கூட்டணியில் உரிய மரியாதை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. தமிழக காங்கிரஸில் இருந்து 39 தலைவர்களை டெல்லி தலைமை அழைத்து தனித்தனியாக கருத்து கேட்டது. எங்களின் கருத்துக்களை உரியவர்களிடம் கட்சித் தலைமை கூறி இருக்கும் என்று நம்புகிறோம். தோழமை கட்சிகளை காங்கிரஸ் கட்சி விமர்சிக்காது.
பிரதமரின் மதுரை வருகை
அதேபோல் தமிழ்நாட்டிற்காவது பிரதமர் மோடி பயமின்றி வருகிறார். அதிமுக கூட்டணியை அமித்ஷா 3வது இடத்திற்கு தள்ளிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி சீமானுடன் போட்டி போட்டு வருகிறது. அந்த போட்டியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மதுரை வரும் போதாவது மதுரை எய்ம்ஸின் உண்மை நிலை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்!












Click it and Unblock the Notifications