நைட்டியுடன் மஞ்சுளா.. கோயிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலர்.. பதறிய அர்ச்சகர்.. மாலையே பணிநீக்கம்!
சேலம்: திமுகவை சேர்ந்த சேலம் பெண் கவுன்சிலர் கொடுத்த நெருக்கடியால் சேலம் சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயிலின் அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகரில் சீதா ராமசந்திர மூர்த்தி கோயில். இந்த கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.
இந்த கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் கண்ணன் (32). அவர் கடந்த 27ஆம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் உருக்கமான தகவல்களை தெரிவித்திருந்தார்.

23 ஆண்டுகள்
அவர் கூறுகையில், இந்த கோயிலில் நான் 23 ஆண்டுகளாக அர்ச்சகராக சேவையாற்றி வருகிறேன். திமுகவை சேர்ந்த மாநகராட்சி 40ஆவது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா கோயில் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து வருகிறார். மேலும் அடியாட்களை கொண்டும் மிரட்டுகிறார்.

ஆபத்து
எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதான். இதுகுறித்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கண்ணனை மஞ்சுளா ஒருமையில் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

வீடியோ
அந்த வீடியோவில் கண்ணனை மஞ்சுளா ஒருமையில் பேசுகிறார். அங்கிருந்த மக்கள் அர்ச்சகருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறார்கள். எனினும் அதை கண்டு கொள்ளாமல் அவர் ஒருமையிலேயே பேசி வருகிறார். இது தொடர்பாக மஞ்சுளா கூறுகையில் பெண் பக்தர்களிடம் அர்ச்சகர் தவறாக நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்தன.

அர்ச்சகரை கண்டித்தேன்
அதற்காக அர்ச்சகரை கண்டித்தேன். ஆனால் அவர் என் மீது பொய் கூறுகிறார் என தெரிவித்துள்ளார். இருவருமே மாறி மாறி புகாரை கூறியுள்ளார்கள். மேலும் கோயில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதை பார்வையிட மஞ்சுளா நைட்டியுடன் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

நீக்கப்பட்ட அர்ச்சகர்
இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த தினத்தன்று மாலையே அர்ச்சகர் கண்ணன் கோயிலிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு புது அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சகர் கண்ணன் கூறுகையில் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை மட்டும் செயல் அலுவலர் எடுத்து கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார். எந்த விசாரணையும் இன்றி நான் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என கண்ணன் தெரிவித்தார்.
-
திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம் -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications