அன்று திருமுருகன் காந்தி...இன்று வளர்மதி...கொந்தளிக்கும் இளைஞர்கள்!
மக்களின் பிரச்னையான ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வந்த மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த மே21ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் நடத்த மே 17 இயக்கம் திட்டமிட்டது, ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி அஞ்சலி செலுத்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மெரினாவிற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 17 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மக்களிடையே விழிப்புணர்வு
இந்நிலையில் சேலத்தை சேர்ந்த இதழியல் பயிலும் மாணவி வளர்மதி ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி சேலத்தில் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சேலத்தில் கைது
நகக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார் வளர்மதி. வளர்மதியை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்வதாக சேலம் காவல்துறை ஆணையர் சஞ்சய்குமார் உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்த வளர்மதி சேலம் சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

நக்சலைட்டுக்கு ஆள் சேர்த்தாரா?
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்கு பலரும் அவரது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக போராடினால் நக்சலைட் , மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதும் தொடர்ந்து போராடும் செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கங்காணி வேலை பார்க்கும் இந்த அரசின் வாடிக்கையாகி விட்டது என்று விமர்சித்துள்ளனர்.

எச்சரிக்கும் இளைஞர்கள்
தொடர்ந்து மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று இளைஞர்கள்
கொந்தளித்துள்ளனர். தேன் கூட்டில் கை வைத்தது தமிழக காவல்துறை, அதன் விளைவுகளை நிச்சயம் தமிழக காவல் துறை சந்திக்க வேண்டிவரும் என்று தங்களின் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.

சிறந்த மாணவிக்கு கிடைத்த பரிசு
சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பரிசுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இப்போது மக்கள் நலனுக்காக போராடியதால் குண்டர் சட்டத்தை அதிமுக அரசு பரிசாகத் தந்துள்ளது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications