சென்னை ஜிஎஸ்டி சாலையில் உருண்டோடிய மனித தலை.. அலறியடித்து ஓடிய மக்கள்
Recommended Video

சென்னை: காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் துண்டிக்கப்பட்ட மனித தலை திடீரென உருண்டோடியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சென்னை மலையம்பாக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 75 ரவுடிகள் ஒன்றாக கைது செய்யப்பட்டனர்.
அந்த ரவுடிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சென்னையில் வழிப்பறி, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

சாலையில் உருண்ட மனித தலை
இந்நிலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் நேற்று திடீரென துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று உருண்டு ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி சாலையில்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரியை அடுத்துள்ளது காட்டாங்கொளத்தூர். காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அலறியடித்து ஓடிய மக்கள்
அப்போது அந்தப் பகுதியில் வெட்டப்பட்ட மனிதனின் தலை ஒன்று சாலையில் வீசப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

பிளாஸ்டிக் கவரில்
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையத்தின் வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் பிளாஸ்டிக் கவர் ஒன்றை சாலையில் வீசி சென்றுள்ளனர்.

வீசிய வேகத்தில்
அவர்கள் அந்த கவரை வீசி சென்ற வேகத்தில் அதில் இருந்து தலை ஒன்று உருண்டு வெளியே ஓடியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கஞ்சா வியாபாரி பாலாஜி
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வீசப்பட்ட மனித தலையை கைப்பற்றினர். அது கோனாதி கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி பாலாஜி என்பவரின் தலை என தெரியவந்துள்ளது.

உடல் எங்கே?
அவரது உடல் எங்கே இருக்கிறது என போலீஸார் தேடி வருகின்றனர். தலைநகரில் தொடரும் கொலை மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications