கத்திரிவெயில் காலம் நாளையுடன் ஓவர்… பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்பு
சென்னை: கடந்த 25 நாள்களாக மக்களை சுட்டெரித்த கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது.
கோடை வெயில் இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி வாட்டி எடுத்தது. கடந்த 4-ந்தேதி அக்னி வெயில் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையானது. தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் சற்று தனிந்து இருந்தது.
அதன் பிறகு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது.
கத்திரி வெயில் முடிவுக்கு வரும் நிலையிலும் அனைத்து மாவட்டங்களிலும் அனல் காற்றுடன் வெப்பம் வாட்டிவருகிறது..

சதமடித்த வெயில்
திங்கட்கிழமையன்று சென்னை, மதுரை, கரூர், பரமத்தி, திருச்சி, வேலூர், பாளையங்கோட்டை ஆகிய 6 இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

கத்திரி ஓவர்
சுட்டெரிக்கும் அக்னி வெயில் நாளையுடன் முடிகிறது. அதன்பிறகு வெயிலின் அளவு படிப்படியாக குறையும்.

தஞ்சையில் மழை
இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தஞ்சையில் திங்கட்கிழமை பலத்த மழை பெய்தது. இரவு 12 மணியளவில் லேசான தூறலாக தொடங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த மழையாக மாறியது.

சூறைக்காற்றோடு மழை
மேலும் சூறை காற்றும் வீசியது. இதனால் ஒரு சில வீடுகளில் இருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றது. சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. அதன் பின்னர் தூறல் நீடித்தது.

மீனவர்கள் லீவ்
இதே போல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் பலத்த சூறை காற்று வீசியது. இந்த சூறை காற்றுக்கு படகு கவிழ்ந்தது. அதில் மீன் பிடிக்க சென்ற தன்ராஜ், கண்ணன் ஆகியோரை சக மீனவர்கள் மீட்டனர்.
தொடர்ந்து சூறை காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மகிழ்ச்சியில் ஆழ்த்திய மழை
நாகை - திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், வேதாரண்யம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் லேசான மழை நீடித்தது. அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் மழை பெய்துள்ளது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தொடங்கும் பருவமழை
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென் மேற்கு பருவமழை காலமாகும். நாட்டின் 75 சதவீத மழை பொழிவு தென் மேற்கு பருவமழை காலத்தை நம்பியே உள்ளது.

அந்தமானில் மழை
ஆண்டு தோறும் மே 20-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கும். இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே கடந்த 18-ந்தேதியே தொடங்கிவிட்டது.

தென்மேற்குப் பருவமழை
இதன் தொடர்ச்சியாக கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications