ஜெயலலிதா வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஆக.29ல் தேர்தல்
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடக்கிறது. போட்டியிட விரும்புவோர் வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மனு செய்யலாம் என அ.தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா தொடர்ந்து அப்பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேர்தல் கமிஷனின் விதிக்கு உட்பட்டு அப்பதவிக்கு வருகிற 29ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக விதிகளின்படி, கட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2013 ஆம் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது பதிவைப் புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குமான பணிகள் தொடங்கப்பட்டன. ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி அதற்கான விண்ணப்பப் படிவங்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் சேர்த்தனர்.
கட்சி விதிகளின்படி, அதிமுக பொதுச்செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கிளைக் கழகங்களின் அடிப்படை உறுப்பினர்களாலும், அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புதுதில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களின் கிளைக் கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு உறுப்பினர் உரிமைச் சீட்டுக்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications