ஸ்டிரைக் வாபஸ்: சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடும்
சென்னை: சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்த வேலை நிறுத்தப்போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல ஆட்டோக்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மீட்டர் போடாமல் ஓடிய ஆட்டோக்கள் மீது போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து சென்னையில் மீட்டர் போடாமல் ஓடிய 3000 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
11 தொழிற்சங்கத்தினர் அழைப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 தொழிற்சங்கத்தினர் இணைந்து நாளை ஆட்டோ ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். கூடுதல் கமிஷனர் கருணா சாகர், இணை கமிஷனர்கள் வரதராஜு, தினகரன், அருண், ஸ்ரீதர், சங்கர்,சண்முகவேல், திருஞானம், துணை கமிஷனர் சிவஞானம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆட்டோ தொழிற்சங்கத்தினருக்கு உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டோ ஸ்டிரைக் போராட்டம் வாபஸ் ஆனது.
ரூ. 100 அபராதம்
சுமார் 3000 ஆட்டோக்களை போலீசாரும், போக்குவரத்து துறை போலீசாரும் பிடித்து வைத்து இருக்கிறார்கள். இதுகுறித்து நடந்த பேச்சு வார்த்தையில் ரூ.2600-க்கு பதில் ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்க போலீசார் ஏற்றுக் கொண்டனர். பிடிபட்ட ஆட்டோக்களை அதன் டிரைவர்கள் அபராத தொகையாக ரூ.100 மட்டும் செலுத்தி ஆட்டோவை மீட்டு வருகின்றனர் என்று ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் தெரிவித்தார்.
மீட்டர் போடாத ஆட்டோக்கள்
போலீசார் மீட்டர் போடாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுப்பது இல்லை. ஆனால் பொது மக்களை மிரட்டி ஆட்டோக்கள் மீது புகார் கொடுக்க வைத்து வழக்கு பதிவு செய்கின்றனர். இதனை போலீசார் நிறுத்த வேண்டும். பொய் வழக்குகள் போட கூடாது.
போராட்டம் வாபஸ்
ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் இனி மீட்டர் போட்டுதான் ஆட்டோவை ஓட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் ஆகிவிட்டதாகவும் சேஷசயனம் தெரிவித்தார்.
-
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்












Click it and Unblock the Notifications