கார் விபத்தில் மாணவி பலி… துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கைது
திருப்பூர்: அதி வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் மாணவி பலியான வழக்கில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன், சட்டசபை துணை சபாநாயகராக உள்ளார். இவருக்கு 19 வயதில் பிரவீன் என்ற மகன் உள்ளார். கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், கடந்த 3ம் தேதி, தன்னுடன் படித்துக் கொண்டிருக்கும் சக மாணவிகள் 5 பேரோடு காரில் ஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பெருமாநல்லூர் ஆதியூர் பிரிவு புறவழி சாலையில் அதி வேகமாக பிரவீன் காரை ஓட்டிச் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி மறுபுறம் பாய்ந்ததோடு, ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இதில் பிரவீனோடு சென்ற மாணவி சுரேகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பிரவீன் உட்பட 5 பேரும் படுகாயம் அடைந்து திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு காரில் வந்த 2 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தீவிர விசாரணையில் பெருமாநல்லூர் போலீசார் ஈட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பிரவீன் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர், உடனடியாக அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications