காங்கிரஸுக்கான 41 தொகுதிகள் ”லிஸ்ட்” இன்றோ, நாளையோ முடிவாகும்- ஸ்டாலின் தகவல்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இன்று அல்லது நாளை முடிவு செய்யப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில்கூட்டணியில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாக கூறி 70 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவினர் அளித்தனர். அதில் 41 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தனர். திமுகவும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

அந்த பட்டியலை தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினர் பரிசீலித்துவிட்டு, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறினர்.இதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் பங்கேற்றனர். இதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் முன் வைத்தது. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் பற்றி இன்று அல்லது நாளை இறுதி செய்யப்படும். மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications