For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூரில் மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது

By Mathi
Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெருமழை கொட்டியது. கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

கெடிலம், பரவணாறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த மழைக்கு நேற்று 20 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Death toll rises to 28 in Cuddalore

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 28 பேர் பலியாகி உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அம்மாவட்டத்தில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

English summary
Cuddalore District officialy announced death toll rises to 28 for flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X