வேகமாக வந்த லாரி மோதி தீபா பிரசார வாகனம் நசுங்கியது.. திட்டமிட்ட சதியா?
சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்துள்ளார். சசிகலாவை விரும்பாத அதிமுகவினர் தீபாவை தேடி போகின்றனர். ஆனால் தீபாவோ ஆரம்பத்தில் சசிகலாவை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருந்தார்.
இந்நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பை தொடங்கிய தீபா, ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். கடந்த ஒருவாரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் போது டி.டி.வி. தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பன்னீர் மீது பாய்ச்சல்
சமீபமாக, ஓபிஎஸ்யையும் கடுமையாக சாடி வருகிறார். ஜெயலலிதா பெயரை போலியாக பயண்படுத்துவதாக பன்னீர்செல்வத்தை தாக்கி பேசி வருகிறார். திடீரென, ஓபிஎஸ் அணியை சார்ந்தவர்கள் தீபாவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தேர்தல் அதிகாரியிடம் தீபா பேரவையினர் புகார் அளித்து பரபரப்பும் கிளப்பினர்.

வாகனம்
இந்த நிலையில் தீபா பயன்படுத்தும் பிரசார வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. தண்டையார் பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிரசார வாகனத்தின் மீது லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நசுங்கிய கார்
லாரி அதி வேகமாக மோதியதால், பிரசார வாகனம் கடுமையான சேதமடைந்து நசுங்கியது. பரபரப்பான சூழ்நிலையில் தீபாவின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கி இருப்பது தீபா பேரவை நிர்வாகிகளுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சதி திட்டமா?
அரசியலில் இருந்து ஓடாவிட்டால் ஆள் இருக்கும்போதே இப்படித்தான் லாரியை விட்டு மோதச் செய்வோம் என்று, அரசியல் எதிரிகள் அச்சுறுத்துவதன் சமிக்ஞைதான் இதுவா என சந்தேகிக்கிறார்கள் தீபா பேரவை நிர்வாகிகள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications