ஒரே ஒரு தொகுதி.. குட்டித் தொகுதி.. இதில் கூட பணப் புழக்கத்தை தடுக்க முடியலைன்னா!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தடுமாறுகிறது, கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.
இதைக் கூட கட்டுப்படுத்த முடியாதா, முடியலையா, என்ன தேர்தல் ஆணையமோ இது என்று மக்கள் சிரித்து கேலி செய்யும் நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது என்பது வேதனையானது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பக்கம் பல குழப்பமான தவறுகள் தொடருவதும் விந்தையாக உள்ளது.

பணப் பட்டுவாடாவால் தள்ளிவைப்பு
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை முதலில் அறிவித்து விட்டு பின்னர் தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். இதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணம், பணம் பெருமளவில் விளையாடியது என்பதுதான்.

ஏன் தடை செய்யவில்லை
ஆனால் யாரை இவர்கள் பணம் கொடுத்தார்கள் என்று குற்றம் சாட்டினார்களோ அவர்களை மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட அனுமதித்தனர். இது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.

அவர்கள் பணம் கொடுக்கத்தானே செய்வார்கள்
யார் பணம் கொடுத்தார்கள் என்று கடந்த தேர்தலில் புகார் கூறப்பட்டனரோ அவர்கள் மீண்டும் போட்டியிடுவதன் மூலம் அதே போலத்தானே மீண்டும் பண விநியோகம் நடக்கும். இது கூடவா தேர்தல் ஆணையத்திற்குத் தெரியாது என்பது சாதாரண ஜனங்களின் கேள்வி.

தேர்தல் அதிகாரியால் குழப்பம்
மேலும் நடிகர் விஷால் வேட்பு மனு பரிசீலனையிலிலும் பெரும் குழப்பம். தேர்தல் அதிகாரியான வேலுச்சாமி செய்த குழப்பத்தால் தேர்தல் ஆணையத்தின் பெயர் மேலும் டேமேஜானது.

மீண்டும் வந்த பிரவீன் நாயர்
இந்தக் குழப்பத்திற்குப் பிறகு தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயரை போட்டனர். இவர்தான் முதலில் தேர்தல் ரத்தானபோதும் தேர்தல் அதிகாரியாக இருந்தவர். தற்போது இவர் பொறுப்புக்கு வந்த நிலையில்தான் அங்கு பெருமளவில் பணப் புழக்கம் நடந்து வரும் சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த இடைத் தேர்தலின்போது காணப்பட்ட அதே சூழல்தான் இப்போதும்.
ஒரு குட்டி தொகுதியில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இப்படித் தத்தளிக்கிறதே தேர்தல் ஆணையம் என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications