கொடநாடு கொலை: சசிகலாவிடம் விசாரணை- கோவை சிறையில் அணிவகுப்பு
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூருவிற்கு விரைந்துள்ளனர்.
கோவை: கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்த சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக காவலாளி கிருஷ்ண பகதுாரை கோவை சிறைக்கு அழைத்து சென்று, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் கெடநாடு எஸ்டேட் உள்ளே புகுந்த, 11 பேர் கும்பல், காவலாளி ஓம் பகதுாரை கொலை செய்துவிட்டு மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுாரை சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ண பகதூர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

போலீஸ் விசாரணை
கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கேரளாவில் உள்ள ஹவாலா கும்பலைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார்,சங்கனாசேரியைச் சேர்ந்த மனோஜ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சயன் கைது?
விபத்தில் சிக்கி காயமடைந்த சயானின் உடல்நிலை தேறி விட்டதால் அவனை கைது செய்து, சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். கொள்ளை கும்பல், மூன்று கார்களில் தப்பிச் சென்ற காட்சிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, முக்கிய ஆதாரமாக இருக்கும் என நம்புகின்றனர்.

கோவை சிறை
ஜம்சீர் அலி, ஜிதின் ஜோய் ஆகியோர் மோசடி வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும், கோவை மத்திய சிறைக்கு மாற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பின் காவலாளி கிருஷ்ண பகதுாரை சிறைக்கு அழைத்து சென்று, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சசிகலாவிடம் விசாரணை
ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்னென்ன? என்பது குறித்து முறையான தகவல்கள் இதுவரை தெரிவில்லை. பங்களாவிற்குள் கோடிக்கணக்கான பணம் இருந்ததாகவும், கொத்து ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இகை கொள்ளையடிக்கப்பட்டதா? உண்மையிலேயே பணம் இருந்ததா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

காவல்துறையினர் அனுமதி
கொடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தினால் விடை கிடைக்கும் என கருதும் போலீசார், இதையடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த காவல் துறையின் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு விரைவு
சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரு சிறை நிர்வாகத்தின் அனுமதி கிடைத்ததும் சசிகலாவிடம் தனி போலீஸ் படையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சசிகலாவிடம் விசாரணை நடத்த கோவையில் இருந்து பெங்களூருவிற்கு தமிழக போலீசார் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications