தேனியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாளை பள்ளிகளுக்கு விடுமுறை- சர்ச்சை
தேனியில் பருவமழை என கூறி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தேனி: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேனியில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பருவமழை என்று கூறி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நடைபெற்று வருகிறது. நாளை வியாழக்கிழமை தேனி -போடி விலக்கு பகுதியில் உள்ள திடலில் நடைபெற இருக்கிறது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு தடை
பள்ளி மாணவர்களை அரசியல் சார்ந்த விழாக்களுக்கு அழைத்து செல்ல கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை உத்தரவு
மாணவர்களை பள்ளி சீரூடையில் இல்லாமல், வழக்கமான ஆடையில் அழைத்து வர அதிமுக நிர்வாகிகள் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. கரூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்த போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளி மாணவர்களை அரசியல் சார்ந்த விழாக்களுக்கு அழைத்து செல்ல கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மாணவர்கள் அழைத்து செல்லப்படுவது உறுதியானால் அது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். எனவே பருவமழையை காரணம் கூறி தேனி மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அவதி
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத் திடலில் மாவட்ட அரசுத் துறைகள் சார்பில் அரசு சாதனை விளக்கக் கண்காட்சி, எம்.ஜி.ஆர்.புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரை தேனியில் இருந்து கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வரும் பேருந்துகள் மற்றும் கனரக வானங்களின் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டுள்ளளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications