நாடா புயல்.. மின்சார விபத்தை தவிர்க்க இந்த எச்சரிக்கைகள் மிகவும் அவசியம்!
நாடா புயல் பாதிப்பினால் ஏற்படும் மின் பாதிப்புகளை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்படுமாறு தமிழ்நாடு மின்வாரியம் எச்சரித்துள்ளது.
சென்னை: நாடா புயல் மற்றும் அதனையொட்டி பெய்யும் மழையால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நடா புயல் கடலூருக்கு அருகில் டிச. 2-இல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி, கரைக்கால், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, வீட்டிற்கு வெளியே மற்றும் வயல்வெளிகளுக்கு செல்லும் போதும் மின் கம்பம் மற்றும் மின் ஓயர்கள் சேதமடைந்து கீழே உள்ளதா என கவனிக்க வேண்டும்.
மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின் பொறி தென்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். மழை மற்றும் காற்றின் போது குழந்தைகளை மின் கம்பம் அருகில் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், மழைநீரில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மின் உபகரணங்கள் நனைந்தால் அதனை பரிசோதித்த பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
ஈரப்பதமான சுவர்களில் மின்கசிவு இருந்தால் பிரதான சுவிட்சை அணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications