அமைதிப் பூங்காவான தமிழகத்தில் குழப்பம் விளைவிப்பதா? எச். ராஜவுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கடும் எச்சரிக்கை
பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு தற்போது ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எச்.ராஜா கருத்திற்கு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதில் ''அதிமுக ஆட்சி அராஜக செயல்களை அனுமதிக்காது. அமைதியாக இருப்போம் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம்.பெரியாரை தமிழ்ச் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கவில்லை.'' என்றுள்ளனர்
அதில் ''தந்தை பெரியார் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை.தமிழகத்தில் ஜாதி, மத கலவரம், தீவிரவாதம் இல்லை.பல மாநிலங்கள் எரிந்த போதிலும், தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.'' என்றுள்ளனர்
அதில் ''அமைதியான பூங்காவில் எச்.ராஜா கல்லெறிந்துவிட்டார்.தமிழகத்தில் குழப்பம் விளைவித்து அதில் மீன் பிடிக்க முடியாது.'' என்றுள்ளனர்












Click it and Unblock the Notifications