மயில்கள் கண்ணீரை குடித்துதான் கர்ப்பம் தரிக்கிறதா? கண்டுபிடிக்க மக்கள் செய்யும் வேலையை பாருங்க
சென்னை: மயில்கள் உடலுறவு கொள்ளாது என்று ராஜஸ்தான் நீதிபதி கூறிய நிலையில், அது உண்மைதானா என்பதை கண்டறிய பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மயில்கள் உடலுறவு கொள்ளாது என்றும் ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதாலேயே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா சில வாரங்கள் முன்பு தெரிவித்து இருந்தார்.
நீதிபதியின் இருந்த கருத்துக்கு அறிவியலாளர்கள் மறுப்பு தெரித்திருந்தனர்.

மீம்கள்
இதேபோல நீதிபதியின் கருத்தை கேலி செய்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் கொடி கட்டி பறந்தன. இருந்தாலும் சிலருக்கு நீதிபதியே கூறியதால் அது உண்மையாக இருக்குமோ என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

மயில் பூங்காவில் கூட்டம்
எனவே நீதிபதி கருத்து கூறிய மறுநாள் முதல் மயில்கள் உடலுறவு கொள்ளுமா? கொள்ளாதா? என்பதைக் காண பாலக்காட்டில் உள்ள சூலனூர் மயில் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல பல்வேறு மிருககாட்சி சாலைகளிலும் மக்கள் கூட்டம் மயிலை சுற்றுகிறது.

வீடியோக்கள்
அதேபோல மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை விளக்கும் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. ஆண் மயில் அழுவதால் பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறதா என்பதைப் பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக மிருககாட்சி சாலை ஊழியர்கள் கூறுகிறார்கள்.

கூட்டம் அதிகரிப்பு
சூலனூர் மயில் பூங்காவில் முன்பெல்லாம் தினமும் 20க்கும் குறைவானவர்களே வந்து சென்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 200-300 வரை அதிகரித்துள்ளது.

பணியாளர்கள் விவரிப்பு
இந்தப் பூங்காவில் மூன்று வகையான 300 மயில்கள் உள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்வாறு மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை பூங்கா பணியாளர்கள் விவரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications