கடையத்தில் சிக்கிய 15 அடி நீள ராஜநாகம்.. மக்கள் பீதி
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையம் அருகே மக்கள் குடியிருக்கும் பகுதியில் 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பிடிபட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கருததபி்ள்ளையூரில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் பிரான்சிஸ். அங்குள்ள மலையடிவார பகுதியில் இருக்கும் பீட்டர் என்பவரது தோட்டத்தில் ஒரு ராஜநாகம் ஊர்ந்து செல்வதை பார்த்தார்.

அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மாலை கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் காஞ்சனா உத்தரவின் பேரில் வனச்சரகர் இளங்கோ தலைமையில் வனவர் மோகன், வனக்காப்பாளர் ரத்தினவேல் செல்லப்பாண்டியன், வேட்டைதடுப்பு காவல்ர்கள் ரமேஷ்பாபு, வேல்ராஜ், பசுங்கிளி, சக்தி முருகன் ஆகியோர் அந்த தோட்டத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள புதரில் பதுங்கி கிடந்த 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை 2 மணி நேரம் போராடி பிடித்தனர். பிடிப்பட்டது பெண் ராஜநாகம் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பொதுவாக ராஜநாகம் குளிர்ச்சியான அடந்த வனப்பகுதியில்தான் வசிக்கும். இதன் காரணமாகவே மிருக காட்சி சாலையில் இதனை குளிர்ச்சியான வசதி கொண்ட பெட்டியில் வைத்து பராமரிப்பர். கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருப்பது போலவே மலை அடிவார பகுதியும் இருப்பதால் ராஜநாகம் இங்கு வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications