பள்ளிகளில் செப். 30 வரை மாணவர்களை சேர்க்கலாம் – பள்ளி கள்வித் துறை
நெல்லை: தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செப் 30ம் தேதி முடிய மாணவர்களை சேர்க்கலாம் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வரும். இதனால் பிளஸ் 1 வகுப்புகள் மட்டும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்படும்.

இதே போல மாணவர்கள் சேர்க்கையை ஜூலை 31 ஆம் தேதிக்குள் முடித்து கல்வி துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்காக மாணவர்கள் சேர்க்கையை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், ஆங்கில இந்திய பள்ளி ஆய்வாளர்களுக்கு தமிழக பள்ளி கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள உத்தரவில்,
"தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின் படி ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் டூ வரை மாணவர்களை சேர்க்க செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரத்தை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications