குடிக்கும் பாலில் மட்டுமல்ல, அடிக்கும் சரக்கிலும் ஊழல்: டாஸ்மாக் மேனேஜர்கள் மூவர் சஸ்பெண்ட்
சென்னை: ஆவின் பால் ஊழல் புகார் ஒருபக்கம் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குடிமகன்களின்' வயிற்றில் அடிப்பதுபோல டாஸ்மாக் நிறுவனத்திலும் மேலாளர்கள் ஊழல் செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குழந்தைகள் குடிக்கும் பால் முதல், குடிமகன்கள் அடிக்கும் சரக்கு வரை அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவது இதில் இருந்து அம்பலமாகிறது.
ஆவின் பால் ஊழல் குறித்து செய்தி வெளியாகிய நிலையில், பால் விலையை அரசு உயர்த்தியது. ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டவே பால் விலை உயர்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பாலை தொடர்ந்து மதுபான விலையையும் அரசின் டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியது. இதன் பின்னணியிலும் ஊழல் இருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 7000 மதுக்கடைகள் உள்ளன. இவை அனைத்தும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்படுபவையே. நிர்வாக வசதிகளுக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 5 மண்டலங்களின் கீழ் 33 மாவட்டங்களாக டாஸ்மாக் நிறுவனம் பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 மாவட்ட மேலாளர்களும், பணியிட மாற்றம், மது குடிப்பகங்களுக்கு உரிமம் வழங்குதல், மதுபானங்களை கொள்முதல் செய்தல், நிலுவைத்தொகையை வசூலித்தல் உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டு, அதன் மூலம் பல லட்ச ரூபாய் ஈட்டியதாகவும், இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின்பேரில், தென் சென்னை, மத்திய சென்னை மற்றும் வட சென்னை மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் ணியிடை நீக்கம் செய்துள்ளது.
தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தென் சென்னை மாவட்ட மேலாளர் மகேஸ்வரி 2008 - 2009 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வேலூரில் பணியாற்றிய போது முறைகேட்டின் மூலம் 28 லட்ச ரூபாய் ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications