கம்யூனிஸ்ட்களுடன் நித்யானந்தா மோத வேண்டாம்: தா.பாண்டியன் எச்சரிக்கை
சென்னை: கம்யூனிஸ்ட்களுடன் மோத வேண்டாம் என நித்யானந்தாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 16-வது மாநில மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வந்த தா.பாண்டியன் செய்தியாளர்களிடம், நித்தியானந்தாவை கடுமையாக சாடினார்.

ஆன்மிக துறைக்கு அவமானத்தை ஏற்படுத் துகிற வகையில் பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்த்து விமர்சனம் செய்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துபவர்கள். காசு கொடுத்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். அவர் பெண்கள் விஷயத்தில் தான் பண்போடு நடந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். அரசியல் கட்சியினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் மீதான வழக்கை அமைதியாக சந்தித்தால் அவருக்கு நல்லது. கம்யூனிஸ்ட்களுடன் அவர் மோத வேண்டாம்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு விலைவாசி 15 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்களை இலங்கை அரசு கொச்சைப்படுத்திய விவகாரம், மத்திய அரசு தனிநபர் பிரச்சினையாக பார்க்கிறது.
இலங்கை அரசு இவ்வாறு அவமதிக்க, ஆணவத்துடன் செயல்பட யார் காரணம்?. கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு வரலாறு தெரியாமல் உள்ளது.
அவதூறு வழக்குகள் தாக்கல் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். சாலை விபத்துகளில் இழப்பீடு பெறுவதில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications