நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்: பிப்.24 முதல் அமல்
சென்னை: நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரம் பிப்ரவரி 24-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில்கள் இயக்க வசதிக்காக நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் பிப்ரவரி 24-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8.10 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) பிப்ரவரி 24-ந்தேதி முதல் இரவு 8.50 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் மதுரைக்கு அதிகாலை 5.30 மணிக்கும், சிவகாசிக்கு காலை 6.42 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.
மறுபாதையில் செங்கோட்டையில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு புறப்படும் அந்த ரயில் (12662) நேரம் மாற்றத்திற்கு பின் மாலை 6.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கும், சென்னை எழும்பூரை காலை 6.40 மணிக்கும் வந்தடையும்.
இதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.50 மணிக்கு நெல்லை புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12631) பிப்ரவரி 24-ந்தேதி முதல் இரவு 8.10 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லையையும் சென்றடையும்.
நெல்லையில் இருந்து தினமும் மாலை 6.50 மணிக்கு புறப்படும் அந்த ரயில் (12632), நேர மாற்றத்திற்கு பின் இரவு 7.25 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இரவு 10.10 மணிக்கு மதுரையையும், மறுநாள் காலை 7.10 மணிக்கு எழும்பூரையும் வந்தடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications