சண்டை போட்டுக்காம கொடியேற்றி.. லட்டு சாப்பிட்டு... சுதந்திர தினத்தைக் கொண்டாடிய காங்கிரஸார்!
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அமைதியான முறையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கொடியேற்றி வைப்பது யார் என்பது குறித்து ஏற்கனவே சர்ச்சை இருந்ததால் பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொடியேற்றி கொண்டாடினர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார், குஷ்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் மேலிடத்திலிருந்து தேசிய செயலாளர் சின்னா ரெட்டி என்பவர் வந்திருந்தார். அவரது முன்னிலையில் கே ஆர்.ராமசாமி கொடியேற்றி வைத்தார். அனைவரும் சல்யூட் வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.

கோஷ்டிப் பூசல் இருக்கு... என்ன பண்றது.!
பின்னர் சின்னா ரெட்டி கூறுகையில், தமிழக காங்கிரசில் கோஷ்டிகள் இருப்பதை அறிவேன். ஆனால் இன்று எல்லோரும் ஒற்றுமையாக நின்று சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளோம்.

ஒற்றுமையா இருப்போம்ல
இதேபோல் காங்கிரஸ் உணர்வுடன் தான் அனைவரும் இருப்பார்கள். புதிய தலைவரை நியமிப்பது பற்றி கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது. விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படலாம்.

விரைவில் டெம்பரரி தலைவர்
ஒருவேளை காலதாமதம் ஆனால் தற்காலிக தலைவர் நியமிக்கப்படுவார். விரைவில் வரவிருக்கும் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் அவர் தலைமையில் நடைபெறும் அல்லது இன்று நடந்தது போல் சிறப்பாக நடத்தப்படும் என்றார் சின்னா ரெட்டி.

லட்டு சாப்பிட்டாங்க
கொடியேற்றி வைத்ததும் லட்டு தரப்பட்டது. தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் லட்டு ஊட்டி விட்டுக் கொண்டது காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொண்டர்களும் கூட அமைதியான முறையில் இருந்து லட்டு வாங்கிச் சாப்பிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications