ஆயிலை கிளின் செய்ய ஆள் வேணும்… சுற்றுச்சூழல் அமைப்பு மாணவர்களுக்கு அழைப்பு
கடலில் கொட்டிய டீசல் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனை அகற்றவும் கடற்கரையை சுத்தம் செய்யவும் தன்னார்வலர்கள் தேவை என்று சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
சென்னை: கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றவும் கடற்கரையை தூய்மை செய்யவும் மாணவர்கள், இளைஞர்கள் வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
கடந்த 27ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் கப்பல் இரண்டு மோதிக் கொண்டதில் கப்பலில் கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவி கடலோரப் பகுதிகள் மாசடைந்துள்ளன. எண்ணெய் பரவிய பகுதிகளில் அரசு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், அந்தந்த பகுதி மீனவர்கள் தாமாக முன்வந்து கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று, சென்னையில் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் துறையில் வேலை பார்ப்போர் என அனைவரையும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அழைப்பில் கடலில் பரவி வரும் எண்ணெய்யை அகற்ற அரசுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களாக வருமாறு கூறப்பட்டுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்த 3 நாட்கள் வேலை செய்யக் கூடிய வகையில் தயாராக வருமாறும், அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை பார்த்து எண்ணெய்யை அகற்றும் பணியை செய்ய விரும்புவோர் 9677097824 என்ற எண்ணை தொடர்பு கெள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications