குதிரைகள் பூட்டப்பட்ட வாகனத்தில் ஜார்ஜ் பிளாய்டு "இறுதிப் பயணம்".. கண்ணீர் மல்க விடை கொடுத்த மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் படுகொலை செய்யப்பட்ட கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.
கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்பவரை விசாரணைக்காக போலீஸ் அதிகாரிகள் 4 பேர் கடந்த 25-ஆம் தேதி அழைத்து சென்றனர். அப்போது அவரை ஒரு அதிகாரி முழங்காலால் பின்னங்கழுத்தை நெரித்தார்.
இதில் தன்னால் மூச்சு விட முடியவில்லை என கூறியும் விடாமல் அந்த அதிகாரி கழுத்தை நெரித்தார். பிளாய்டின் உடல் அசைவுகள் நின்றவுடன்தான் அவர் காலை எடுத்தார்.

சீர்திருத்தம்
காலம் காலமாக கருப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டது. ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டும், போலீஸ் சீர்திருத்தம் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

நிகழ்ச்சி
தற்போதும் இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இன்று ஜார்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. தேவாலய பிரார்த்தனைக்கு பிறகு, அங்கிருந்து அவரது உடல் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சாலையின் ஓரம்
இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்திருந்தனர், அவரது ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலம் செல்லும் சாலையின் ஓரத்தில் சிலர் முழங்காலிட்டும் அஞ்சலி செலுத்தினர்.

பிரியாவிடை
அவரது இறுதி ஊர்வலம் பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் முடிவடைந்தது. அங்குள்ள ஜார்ஜின் தாயாரின் கல்லறைக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications