அணு ஆயுத முப்படைகளை கட்டமைக்கும் சீனா... உலகப் போருக்கு தயாராகிறதா? அதிர்ச்சி தரும் யு.எஸ். அறிக்கை
வாஷிங்டன்: சீனா அணு ஆயுத முப்படைகளை அதிவேகமாக கட்டமைத்து வருவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சீனாவின் ராணுவ வலிமை தொடர்பான ஆய்வறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்துடனான சீனாவின் மோதல் போக்கு, அமெரிக்கா-இந்தியா உறவை சீர்குலைக்கும் சீனாவின் போக்கு, சீனாவின் அணு ஆயுத பெருக்கம் ஆகியவை குறித்து விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான எல்லை மோதல்
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 2020-ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இந்திய கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் சீனாவின் ஊடுருவல் தொடங்கியது. அப்போது இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே பல இடங்களில் கைகலப்புகள் நிகழ்ந்தன. இமயமலை பகுதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை சீனா கட்டமைத்திருக்கிறது.

இந்திய எல்லையில் சீனாவின் கிராமங்கள்
திபெத் சுயாட்சி பிரதேசம், இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா புதிய பொதுமக்கள் குடியிருப்பை கட்டமைத்திருக்கிறது. எல்லை கடந்த ஊடுருவல் நடவடிக்கைகளுக்காக இந்த கட்டமைப்பை சீனா உருவாக்கியது. இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சீனாவின் ஊடுருவல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

அணு ஆயுத குவிப்பில் சீனா
சீனாவைப் பொறுத்தவரையில் முப்படைகளையும் அணு ஆயுதமயமாக்கி உள்ளது. சீனாவிடம் தற்போதைய நிலையில் 200 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் இதனை இரு மடங்காக அதிகரிக்க சீனா திட்டமிட்டிருக்கிறது. சீனாவின் இந்த அணு ஆயுத விரிவாக்கம் சர்வதேச நாடுகளுக்கு கவலை தரக் கூடியதாகும். அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிக்கும். காற்று, நிலம், கடல், விண்வெளி என அனைத்து நிலைகளிலும் அமெரிக்காவுக்கு சவால் விடுகிறது சீன ராணுவம். இவ்வாறு அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான பேச்சுவார்த்தை
லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து சீனாவுடன் 13 கட்டமாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. அண்மையில் திடீரென எல்லை பாதுகாப்புக்கான சட்டத்தை சீனா நிறைவேற்றியது. சீனாவின் இத்தகைய இடைவிடாத நடவடிக்கைகளில் இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியான பதற்றத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications