சைத்ரா ரெட்டி கூறிய சந்தோஷமான செய்தி.. இதற்குள் இவ்வளவு நாள் ஆகிவிட்டதா??
சென்னை: சன் டிவியில் கயல் சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.
Recommended Video
வில்லியாக இதுவரைக்கும் நடித்து வந்த சைத்ரா தற்போது கதாநாயகியாக மாறி சொன்ன, நல்ல செய்திக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

கயல் ஆக அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இதை ஏற்கனவே நாங்கள் எதிர்பார்த்தோம் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதுவரைக்கும் வில்லியாக அனைவரையும் மிரட்டிய சைத்ரா தற்போது கதாநாயகியாக அனைவருடைய மனதையும் கவர்ந்து இருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தற்போது கயல் என்று இவரை செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பொதுவாக சன் டிவி சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் எப்போதுமே தனி மதிப்பை பெற்றுவிடுகிறது. காலகாலமாக எப்போதுமே இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது இந்த சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. குடும்ப சுமையை தன் தலையில் சுமந்து சுமை தாங்கும் கயலை பலருக்கும் பிடித்திருக்கிறது. தான் இந்த மாதிரி ஒரு சுமையை தாங்கும் கேரக்டராக இல்லை என்றாலும் கயல் போன்ற ஒரு பெண் தன் வீட்டில் இருக்காதா என்று பலரும் பீல் பண்ணி வருகிறார்கள்.

பிடித்த கேரக்டர் இதுதானாம்
சைத்ரா ரெட்டி முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார். இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளுக்கு தேவையான அம்சங்கள் இருந்தாலும் இவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் தான் கிடைத்து வருகிறது. இவருக்கு ஹீரோயினியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் மிகவும் பிடித்ததாம். அதில் தான் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிக்காட்ட முடியும் என்பது இவருடைய கருத்து. அதனால்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக அனைவரையும் மிரட்டி வந்தார்.

மகிழ்ச்சியான செய்தி
தற்போது சன் டிவியில் இவர் நடித்து வரும் கயல் சீரியல் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு ரசிகர்களுக்கு நன்றி கூறிய இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது அற்புதமான பயணம், அதில் தனக்கு வெற்றி தந்த ரசிகர்களுக்கு மகத்தான ஆதரவளிக்கும் என் மக்களுக்கும், நீங்கள் இது போல் இந்த மகத்தான அன்பு தந்ததற்கு நன்றி என்று சைத்ரா கூறியிருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications