பிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் கடிதத்தை ஏற்று, இந்தியாவுக்கான ஆப் பிளே ஸ்டாரில் இருந்து டிக் டாக் ஆப்பினை கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் நீக்கியுள்ளன.
இதனால் இனி இந்தியாவில் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மற்றும் குழந்தைகள் டிக் டாக் ஆப்பில் தவறாக சித்தரிக்கப்படுதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று மத்திய அரசு கடிதம் எழுதியதால் டிக் டாக் ஆப் கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

புதிதாக 9 கோடி பேர்
உலக மக்களை அவ்வப்போது சில தொழில்நுட்ப விஷயங்கள் வெகுவாக கவர்ந்துவிடும். அப்படி ஒரு தொழில்நுட்ப விஷயம் தான் டிக் டாக் ஆப். பின்னணி பாடலுக்கு வாயசைத்து, நடனம்ஆடி, டப்ஷ்மாஷ் செய்து பொழுதுபோக்கு வீடியோ வெளியிடும் சீனாவின் ஆப் உலகம் முழுவதும் சில மாதங்களில் அதி வேகமாக பரவியது. இந்தியாவில் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் புதிததாக 8 கோடியே 86 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை டவுன்லோடு செய்திருந்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 18 கோடியே 8 லட்சம் பேர் டிக்டாக் ஆப்பை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது.

தடை செய்ய கோரிக்கை
இந்நிலையில் டிக்டாக் ஆப்பில் தான் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எந்த நேரமும் மூழ்கி கிடக்கும் அளவுக்கு அபாயமாக மாறியது. பெண்கள் சர்வசாதாரணமாக ஆபாசமாகவும், ஆண்கள் அவதூறாகவும் மீம்ஸ் வீடியோக்களை வெளியிடுவதாக புகார் எழுந்தது. இதனிடையே டிக் டாக் சமூக சீரழிவு ஏற்படுவதாகவும், டிக்டாக் ஆப்புக்கு அடிமையாகி சிலர் மரணம் அடைந்துள்ளதாகவும் , இளைஞர்களிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் இந்த ஆப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட் அதிரடி
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும் முன்பே டிக் டாக் போன்ற சமூகத்தை சீரழிக்கும் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பிளே ஸ்டோர்களில் இருந்து டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

தடைக்கு விலக்கு இல்லை
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் விசாரணையையும் ஒத்திவைத்தது.

கூகுள் நீக்கியது.
இதன்காரணமாக டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது . இதை ஏற்று கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப்பை நேற்றே நீக்கிவிட்டன.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications