சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பதற்காக விஜயா ஒரு பெண்ணை பார்த்து பேசி முடிக்கிறார். இந்த விஷயம் ரோகிணிக்கு தெரிகிறது. அதே நேரத்தில் முத்து வாழ்க்கையில் நல்ல விஷயம் நடக்கிறது என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், மனோஜ் ரோகிணியை எப்படியாவது டைவர்ஸ் கேஸில் சிக்க வைக்க வேண்டும் என்று பிளான் போடுகிறார். அதற்காக தனது நண்பன் சந்தோஷை பயன்படுத்துகிறார். ரோகிணியை காதலிப்பது போல நடித்து, ஒரு பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும் என்று மனோஜ் சந்தோஷிடம் சொல்லுகிறார். நண்பனின் பேச்சை நம்பி சந்தோஷும் ரோகிணியிடம் சென்று காதலை சொல்கிறார். ஆனால் அந்த திட்டம் எதிர்பார்த்தபடி செல்லவில்லை.

ரோகிணி சந்தோஷை தனியாக ஒரு இடத்திற்கு வரச் சொல்லி, அங்கே அவருக்கு சவுக்கடி கொடுக்கிறார். அதன் பிறகு அங்கு வந்த முத்துவும் மனோஜும் சேர்ந்து சந்தோஷை காப்பாற்றுகிறார்கள். இதனால் மனோஜின் திட்டம் முழுவதும் சொதப்பி விடுகிறது. அதனால் மனோஜ் மிகவும் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
(Siragadikka Aasai Serial March 11, 2026 episode) அடுத்த நாள் மனோஜ் ஷோரூமில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி அங்கு வருகிறார். ரோகிணியை பார்த்ததும் சந்தோஷ் உடனே ஒளிந்து கொள்கிறார். அதை பார்த்த ரோகிணி மனோஜை பார்த்து கிண்டலாக பேச ஆரம்பிக்கிறார். "உனக்கு தான் பிளான் ஒழுங்கா பண்ண வராதுல்ல... நீ போட்ட பிளான்ல பாவம் உன்னோட நண்பன் தான் அடிவாங்கிட்டான்" என்று சொல்கிறார். அதற்கு பதிலாக மனோஜ், "நீ ரொம்ப டேஞ்சரான ஆள். சந்தோஷையே இப்படி ஆள் வச்சு அடிச்சிருக்க" என்று திட்டுகிறார்.
இதற்கு ரோகிணி உடனே பதிலடி கொடுக்கிறார். "நீ மட்டும் என்ன ஒழுங்கானவனா? உன்னோட மனைவியைக் கெட்டவளாக காட்ட ஒருத்தனை அனுப்பி அவளிடம் காதல் சொல்ல வைக்கிறாய். உலகத்துல எந்த கணவன் இப்படிச் செய்வான்?" என்று நேரடியாக கேள்வி கேட்கிறார். இதனால் மனோஜ் கொஞ்சம் திணறுகிறார்.
ரோகிணியின் பதிலடி
அதன்பிறகு மனோஜ், "நீ எதுக்காக இங்க வந்திருக்க?" என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி தன்னுடைய பையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான செக்கை எடுத்துக் கொடுத்து, "ஒரு கல்யாண சீர்வரிசைக்கான அட்வான்ஸ் இது" என்று கூறுகிறார். அதோடு "நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன்" என்று ஒரு வசனம் சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
முத்து மீனாவின் வாழ்க்கையில் நல்ல விஷயம்
இதற்கிடையில் முத்துவின் வாழ்க்கையிலும் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. முத்து மீனாவின் பூக்கடைக்கு செல்கிறார். அங்கு மீனா கொடுத்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது ஒரு தம்பதி அவரை சந்திக்க வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பையனை முத்து காப்பாற்றியிருந்தார். அந்த பையனின் பெற்றோர்கள்தான் அந்த தம்பதி. தங்கள் மகனை காப்பாற்றியதற்காக முத்துவுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அப்போது முத்து தானே ஒரு டிரைவராக வேலை பார்த்து வருவதாக சொல்கிறார். அதை கேட்ட அவர்கள், "நீங்கள் ஒரு வேன் வாங்குங்கள். இங்க நிறைய பேர் டூர் போவார்கள். அப்படி போனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்" என்று ஆலோசனை கூறுகிறார்கள். அந்த யோசனை முத்துவுக்கும் பிடித்து போகிறது.

மனோஜ்க்கு கல்யாணம்
இதற்கிடையில் மற்றொரு பக்கம் மனோஜின் அம்மா விஜயா தனது மகனுக்கு புதிதாக பெண் பார்க்க ஆரம்பிக்கிறார். அவர் தனது தோழி பார்வதி வீட்டில் அமர்ந்திருக்கும்போது, அங்கு இரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெண்ணை மனோஜுக்கு திருமணம் செய்யலாம் என்று பேச வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு 30 வயதாகிவிட்டதாக அவர்கள் சொன்னதும் விஜயா கொஞ்சம் அதிர்ச்சி அடைகிறார். ஆனால் அந்த பெண்ணின் அப்பாவுக்கு நிறைய சொத்து இருக்கிறது என்று சொன்னதும் விஜயாவின் முகம் உடனே மாறி விடுகிறது.
ரோகிணிக்கு தெரிந்த உண்மை
அதன்பிறகு விஜயா தனது மகனுக்கு பெரிய பெரிய இடங்களில் இருந்து வரன் வருகிறது என்று பெருமையாக பேச ஆரம்பிக்கிறார். அதை அருகில் இருந்த பார்வதி மற்றும் சிந்தாமணி இருவரும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
இந்த விஷயம் அங்கேயே நிற்காமல் சிந்தாமணி நேராக ரோகிணி வீட்டிற்கு சென்று சொல்லி விடுகிறார். "மனோஜுக்கு விஜயா புதிய பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று சொல்லியதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இதைக் கேட்ட ரோகிணியின் அம்மா மிகவும் கவலையாக "என் பொண்ணோட வாழ்க்கையே போச்சு" என்று புலம்ப ஆரம்பிக்கிறார். அதை கேட்ட ரோகிணி மிகவும் கோபமாகி அங்கிருந்த கண்ணாடி கிளாஸை தள்ளி உடைத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications