உங்க கூட சேர்ந்தாலே...பிரியங்காவை முகத்துக்கு நேரே திட்டிய தாமரை
சென்னை: கலகலப்பாக இருந்த தாமரை செல்வி தற்போது பிரியங்காவை முகத்துக்கு நேரே திட்டியதுதான் வைரலாக பரவி வருகிறது.
அடிச்சிக்கிறதும் கூடிக்கிறதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புதியது அல்ல ஆனால் தற்போது நடந்த விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது.
ஏற்கனவே வேதனையில் இருக்கும் பிரியங்காவை தாமரையும் தன்னுடைய பங்குக்கு சிரிச்சுக்கிட்டே திட்டிவிட்டார்.

குழந்தை தனமான கேரக்டர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் நடக்குது என்று ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். ஒருபக்கம் ஒன்றாக சேர்ந்து கூடி கும்மியடித்து ஜாலியாக இருக்கின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் சீரியஸாக பேசி விடுகின்றனர். இதில் எது உண்மையான கேரக்டர்?? எது பொய்யான கேரக்டர்?? என்பது ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்த மாதிரி இந்த சீசன் இப்போது இல்லை என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

பிரச்சனைகள் தொடங்கிவிட்டது
விஜய் டிவியில் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா, இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவர் எப்போதுமே தன்னுடைய தனித்தன்மை மாறாமல் ஜாலியாகத்தான் இருந்து வருகிறார். ஆனால் ஒரு சில நேரங்களில் இவர் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறது. முதல் வாரத்தில் கலகலப்பாக இருந்த இந்த சீசன் இரண்டாவது வாரத்தில் பிரச்சனைகளில் அடி எடுத்து வைக்க தொடங்கி விட்டது. அதற்கு காரணத்தில் பிரியங்காவும் ஒருவர் தான். இவர் எதார்த்தமாக அடுத்தவர்களிடம் பேசுகிறேன் என சில நேரங்களில் பலருடைய மனதை காயப்படுத்தி விடுகிறார் என்று ரசிகர்கள் கூறிவிடுகின்றனர்.

தாமரையின் வெகுளித்தனம்
ப்ரியங்கா உடனே அடிக்கடி சுற்றிக்கொண்டிருக்கும் தாமரை செல்வியும் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுவிட்டார். ஆரம்பத்தில் வெகுளித்தனமான பேச்சால் இவர் ரசிகர்களை கவர்ந்து விட்டாலும், அதற்குப் பிறகு இவர் உண்மையிலேயே இப்படித்தான் இருக்கிறாரா??அல்லது நடிக்கிறாரா??என்று பலபேர் யோசிக்கத் தொடங்கி விட்டனர். அதற்கு காரணம் அவருடன் நிகழ்ச்சியில் இருக்கும் சக போட்டியாளர்கள் தான். தாமரை வெள்ளந்தியாக இருப்பதைப் பார்த்து இப்படி எல்லாம் இருப்பார்களா என சிலர் பேச தொடங்கியதற்கு பிறகு ரசிகர்கள் பலருக்கும் இவர்மீது இதே சிந்தனை தொடங்கியிருக்கிறது.

பிரியங்காவின் சிறப்பு
தாமரை மன சோர்வாக இருந்த நேரத்தில் அவருக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா தற்போது குரூப் சேர்த்துக்கொண்டு விளையாடுகிறார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்தாலும், அவருடைய முகத்துக்கு நேராக நேற்றைய எபிசோட்டில் தாமரை பேசியதுதான் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உங்க கூட சேர்ந்தாலே விலங்காது என காமெடியாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியதாக தாமரையைப் பார்த்து ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் இந்த மாதிரி தாமரை சொன்னதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் பிரியங்கா உதறித்தள்ளியது தான் அவருடைய சிறப்பு என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications