டேபிள்டாப் ரன்வேயில் தரையிறங்கும் போது முழு வேகத்தில் வந்த விமானம்.. விபத்து குறித்து டிஜிசிஏ தகவல்
திருவனந்தபுரம்: தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முழுவேகத்தில் வந்ததாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. டேபிள்டாப் ரன்வே என்றால் சாய்வாக இருக்கும், இரு மருங்கிலும் ஆழமான பள்ளத்தாக்குகள் இருக்கும்.
Recommended Video
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் மொத்தம் 191 பேர் இருந்தனர். தரையிறங்கும் நேரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும் நிலை இருந்தது. கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் முழு வேகத்தில் வந்தது. இதனால் ரன்வேயை தாண்டிச் சென்று 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது என்று தெரிவித்துள்ளது.

ஆழம்
முதற்கட்ட விசாரணையில் முதலில் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இரண்டாவது முறை ஹார்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தின் ஓடுதளங்களை (runway) சுற்றி ஆழமான பள்ளத்தாக்குகள் இருக்கும்.

3 விமான நிலையங்கள்
இந்தியாவில் விமான நிலையங்களில் உள்ள ரன்வேயில் தரையிறங்க ஆபத்தான விமான நிலையங்களில் கோழிக்கோடு விமான நிலையம் ஒன்றாகும். அதாவது சாய்வான நிலப்பரப்பில் இந்த ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் 3 சாய்தள ஓடுபாதைகள் உள்ளன. அவை கோழிக்கோடு, மங்களூர், மிசோரமில் உள்ள லெங்பய் ஆகியவை ஆகும்.

ரன்வே
இந்த டேபிள் டாப் ரன்வேக்களில் தரையிறக்க கூடுதல் திறமையும் அனுபவமும் தேவை. சாய்தளம் மற்றும் ரன்வேயை சுற்றி பள்ளத்தாக்குகள் என்பதால் இங்கு விமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது.

விமானி பலி
இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 4 விமான பணியாளர்கள் இருந்தனர். இதில் விமானி தீபக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். துணை விமானியும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு இறந்துவிட்டார். விமானி தீபக் இந்திய விமான படையின் முன்னாள் விங் கமாண்டர் ஆவார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications