கேமராவை ஆப் பண்ணுங்க.. இன்டர்வியூவில் பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்த கேரள நடிகர்.. அதிரடி கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்டர்வியூவின்போது கேமராவை ஆப் செய்யக்கூறி பெண் பத்திரிகையாளரை திட்டி தகாத முறையில் நடந்து கொண்ட நடிகர் ஸ்ரீநாத் பாசியை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீநாத் பாசி. ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர் வீடியோ ஜாக்கியாக மாறினார். அதன்பிறகு 2011ல் சினிமா துறையில் கால்பதித்தார்.
2011ல் மோகன்லால் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கி ஹிட் அடித்த 'பிராணாயம்' படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

புதிய படம்
இவர் தற்போது ‛சட்டம்பி' எனும் படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனால் படத்துக்கான புரோமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. நடிகர் ஸ்ரீநாத் பாசி உள்பட நடிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். மேலும் தொலைக்காட்சி, யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

நேர்க்காணல்
அந்த வகையில் சட்டம்பி' படம் தொடர்பாக ஆன்லைன் செய்தி சேனல் நிறுவனம் நேர்க்காணல் எடுக்க விரும்பியது. இதற்கு நடிகர் ஸ்ரீநாத் பாசி ஒப்புக்கொண்டார். நேர்க்காணலும் தொடங்கி நடைபெற்றது. அவரிடம் பெண் பத்திரிகையாளர் கேள்விகள் கேட்டு வந்தார். திடீரென்று ஸ்ரீநாத் பாசி கோபமடைந்தார்.

கேமராவை ஆப் செய்யக்கூறி
மேலும் கேமராவை ஆப் செய்யும்படி கூறிய அவர் பெண் பத்திரிகையாளரை கோபமாக திட்டினார். மேலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அதோடு கேமராமேனையும் அவர் திட்டியுள்ளார். கேமரா ஆப் செய்த பிறகு பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையில் அவர் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

நோட்டீசுக்கு பதில் இல்லை
இதுதொடர்பாக அந்த பெண் நிருபர் கொச்சி மரடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் ஸ்ரீநாத் பாசி நோட்டீசுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என போலீசிடம் அனுமதி கோரினார். ஆனால் திடீரென்று நேற்று போலீஸ் நிலையம் சென்று விசாரணைக்கு ஆஜரானார்.

அதிரடி கைது
இதையடுத்து ஸ்ரீநாத் பாசியிடம் ஒருமணிநேரம் வரை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நான் யாரிடமும் தவறாக நடக்கவில்லை. என்னிடம் தவறான கேள்வி கேட்டதால் அதற்கு பதில் அளிக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தேன். மோசமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என போலீசாரிடம் கூறினார். இருப்பினும் அவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீநாத் பாசி மீது இந்திய தண்டனை சட்டம் 509, 354(ஏ), 294 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications