For Daily Alerts
Just In
மத்தியப் பிரதேசத்தில் கடும்வெயிலுக்கு 12 மயில்கள் பலி
நரசிங்கஷீலா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 12 மயில்கள் இறந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. பின்னர், மயில்கள் இறப்பு குறித்து அறிவதற்காக மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு அவைகள் கொண்டுவரப்பட்டன.
பரிசோதனையில் அதிக வெப்பம் மற்றும் தண்ணீர் தாகத்தால் மயில்கள் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மயில்கள் அதிகம் காணப்படும் இடங்களில் தண்ணீர் தொட்டிகளை பரவலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Story first published: Thursday, April 29, 2010, 11:21 [IST]