For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெர்னாண்டசை நீக்க கம்யூனிஸ்ட் வற்புறுத்தல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சவப்பெட்டி ஊழல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை உடனடியாகஅப்பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மத்திய அரசை வற்புறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெஹல்கா ஊழல் தொடர்பாக நடைபெற்று வரும் வெங்கடசாமி கமிஷன் விசாரணை முடிவடையாத நிலையில்,பெர்னாண்டசை மீண்டும் அமைச்சர் பதவியில் நியமித்ததே பெரும் தவறு.

இந்நிலையில் சவப்பெட்டி ஊழலும் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பெர்னாண்டஸ் அமைச்சராகஇருப்பதற்கே தகுதியற்றவர். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்தே ஆகவேண்டும்.

அவரைக் காப்பாற்றுவதற்கு பிரதமர் வாஜ்பாய் எந்த வகையிலும் முயற்சிக்கக் கூடாது.

ரூ.1,046 கோடிக்கு நடந்துள்ள இந்த ஊழல் மூலம் வாஜ்பாய் அரசின் ஸ்திரத் தன்மையே போய்விட்டது. இந்தியராணுவ வீரர்களுக்கும் இறந்தவர்களுக்கும் பெரும அவமானத்தைத் தேடித் தந்துள்ளது இந்த ஊழல் என்றுஅவ்வறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X