கம்ப்யூட்டர்மயமாகிறது தமிழக அரசின் தலைமைச் செயலகம்
சென்னை:
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் ரூ.15 கோடி செலவில் கம்ப்யூட்டர்மயமாக்கப்படவுள்ளன.
மாநில சட்டத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இத்தகவலைத் தெரிவித்தார். இதற்காக ரூ.15 கோடி மதிப்பில் திட்டம்தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,
காகித அளவில் உள்ள வேலைகளைக் குறைக்கும் விதமாகவே கம்ப்யூட்டர்மயமாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத் துறைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்றார்அவர்.
கஞ்சாவுடன் கோட்டைக்கு வந்தவர் கைது:
இதற்கிடையே கஞ்சா பொட்டலத்துடன் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்தஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த மணி. முதல்வரிடம் மனு கொடுப்பதற்காகசென்னை வந்திருந்த அவர் தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த மஞ்சள் பையை போலீஸார்சோதனை செய்து பார்த்தபோது, அதில் கஞ்சாபொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
மணி, அடிக்கடி கஞ்சா உபயோகிப்பது வழக்கமாம். அவரை போலீஸார் கைது செய்தனர்.
-->