பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செக்ஸ் வைத்துகொள்ள மறுப்பு.. மனைவியை கொன்று வனப்பகுதியில் வீசிய கணவர்.. பெங்களூரில் கொடூரம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் செக்ஸ்க்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கணவர் படுகொலை செய்து உடலை சீரடி வனப்பகுதியில் வீசிய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் சீதாமர்கியை சேர்ந்தவர் பிருத்விராஜ் (வயது 28). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பெங்களூர் மடிவாளாவில் உள்ள மாருதி லேஅவுட்டில் வசித்து வரும் இவர் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பிருத்விராஜிக்கும், பீகாரை சேர்ந்த ஜோதி குமாரி (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.

 கர்நாடகத்தில் பயங்கரம்.. கோர்ட் வளாகத்தில் கழுத்தை அறுத்து மனைவி கொலை.. கணவன் வெறிச்செயல்! கர்நாடகத்தில் பயங்கரம்.. கோர்ட் வளாகத்தில் கழுத்தை அறுத்து மனைவி கொலை.. கணவன் வெறிச்செயல்!

 மாயமான மனைவி

மாயமான மனைவி

இந்நிலையில் கடந்த 5 ம் தேதி மடிவாளா போலீஸ் நிலையத்திற்கு சென்ற பிருத்விராஜ் தனது மனைவி மாயமாகியதாக புகார் அளித்தார். போலீசார் அவரை தேடிவந்தனர். ஜோதி குமாரி கிடைக்கவில்லை. இதனால் போலீசார் பிருத்விராஜிடம் விசாரித்தனர். அப்போது டெல்லியில் குடியேற வேண்டும் என மனைவி கூறினார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மாயமானதாக கூறினார்.

கொலை செய்த கணவர்

கொலை செய்த கணவர்

இருப்பினும் அடிக்கடி பிருத்விராஜ் தனது நிலைப்பாட்டை மாற்றினார். இதனால் அவர் தனது மனைவியை ஏதாவது செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பு

செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பு

இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பிருத்விராஜ் கூறுகையில், ‛‛என் மனைவி என்னிடம் வயதை மறைத்துவிட்டார். அவருக்கு 30 வயதுக்கும் அதிகமான வயது நிரம்பிய நிலையில் 28 எனக்கூறி திருமணம் செய்தார். மேலும் செக்ஸ் வைத்து கொள்ள அவர் மறுத்தார். இதனால் திருமணத்தை முறித்து கொள்ள கூறினேன். ஆனால் அவர் அதற்கும் மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபத்தில் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்'' என கூறினார்.

தொடரும் விசாரணை

தொடரும் விசாரணை

மேலும் அவர் கொலையை மறைக்க நினைத்தார். இதனால் பிருத்விராஜ் தனது மனைவி ஜோதி குமாரியின் உடலை ஹாசன் மாவட்டம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே சார்மடி வனப்பகுதியில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சார்மடி வனப்பகுதிக்கு சென்ற போலீசார் ஜோதிகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
A gruesome incident has taken place in Bangalore where the husband murdered his wife who refused to have sex and dumped her body in the forest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X