ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் திமுக முன்னணியில் உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அது 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. [2026 Assembly election]

அதன்படி இன்று (மார்ச் 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் பங்கேற்றனர்.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு இன்னும் 39 நாட்களே உள்ளன. 200 தொகுதிகளில் நாம் வென்றாக வேண்டும்.குழப்பம் விளைவிப்போரின் சதியை முறியடித்து பலமான கூட்டணியை அமைத்துள்ளோம். 234 தொகுதிகளையும் கண்காணித்து வருகிறேன். அதிக எம்எல்ஏக்களை வெற்றி பெற்று தருவோருக்கே அமைச்சர் பதவி கொடுக்கப்படும். சீனியாரிட்டி இரண்டாம்பட்சம் தான் என்று பேசினார்.
மேலும், ஐந்தாண்டு திமுக ஆட்சியில் செய்த மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நான் நடத்திய அத்தனை கூட்டங்களையும் மாநாடாக மாற்றிய பெருமை உங்களையே சேரும். எந்த இடத்தில் வாக்கு குறைவாக இருக்கிறதோ அந்த இடத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் நேரடியாக சென்று பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளப்பட்டுள்ளது. கள நிலவரம், திமுகவின் பிரச்சார வியூகங்கள், எதிர்க்கட்சிகளை எப்படி கையாள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
-
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications