சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியாக தாமதம்..கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி புதிய உத்தரவு
சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
டெல்லி: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும் என
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 1.65 பேர் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னர் 5 நாட்களுக்கு கல்லூரிகளில் சேர அந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளைப் பொருத்தே அமையும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒருமாத காலம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications