விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: டெல்லி ராம்லீலாவில் இன்று காங்கிரஸ் போராட்டம்
டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்துகிறது.
நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது என்று பாஜனதா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.
மேலும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் கூறி வந்தது.

மிகப்பெரிய போராட்டம்
இந்த நிலையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இந்த போராட்டத்தில் டெல்லி, அரியானா, உத்தர பிரதேசத்தில் உள்ள தொண்டர்கள், முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தலைவர்களுக்கும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ராகுல் காந்தி தலைமையில்
இந்த போராட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்க உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார். அவர் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதால் இந்த போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.

நாடு முழுவதும் நடைபயணம்
இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், ''கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் விலை வாசி மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பட்டுள்ளது. எனவே இதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதே கோரிக்கையை முன்வைத்து ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டது.

பாரத் ஜோடா யாத்திரை
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீசச்ர் வரை நடைபயணம் (பாரத் ஜோடா யாத்திரை) மேற்கொள்கிறார். மொத்த 3,500 கிமீ தூரம் நடந்தே சென்று ஏழை எளிய மக்களை சந்தித்து அவர்களிடம் தற்போதுள்ள நிலைமையை கூறவும், அவர்களது நிலைமை குறித்து அறிந்து கொள்ள முடிவதாகம் கூறப்பட்டது. மேலும் இந்த நடைபயணமானது வருகிற 7-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications