தேசபக்தியை பேசிக் கொண்டே தேர்தல் களத்தில் பாதுகாப்பு துறையை அசிங்கப்படுவது எப்படி சரி?
டெல்லி: லோக்சபா தேர்தல் களத்தில் தேசியவாதம், தேசபாதுகாப்பு விவகாரங்கள்தான் பாஜகவின் பிரதான முழக்கங்களாக இருக்கின்றன. அதேநேரத்தில் இப்படி தேசியவாதம், எல்லையில் ராணுவ வீரர்கள் என பேசிக் கொண்டே நாட்டின் பாதுகாப்பு துறை பலவீனங்களை பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது எப்படி தேசப்பற்றாகும்? என்பதுதான் ஜனநாயகவாதிகளின் கேள்வி.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்கிற உணர்வுப்பூர்வமான முழக்கத்தை பாஜக முன்வைக்கும். ஆனால் இந்த முறை தேர்தல் களத்தில் அந்த கோஷமே காலாவதியாகிப் போனது.

ஏனெனில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜக, ராமர் கோவில் கட்ட எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இதனால்தான் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் போபாலில் பாஜக வேட்பாளர் சாத்வி பிரயாக்கை எதிர்த்து பிரசாரம் செய்கின்றனர்.
இப்படி அயோத்தி விவகாரத்தை முன்வைக்க முடியாத பாஜக, தேசப் பாதுகாப்பு, தேசியவாதம் என்கிற புதிய கோஷத்தை பேசுகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை பாதுகாக்கிறோம்; குண்டுவெடிப்புகளே நடைபெறவில்லை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினோம் என்கிற பெருமிதங்கள் பாஜக கூட்டங்களில் குறிப்பாக பிரதமர் உரைகளில் தெறிக்கவிடப்படுகிறது.
எதிர்க்கட்சிகளோ ரபேல் விவகாரத்தை முன்வைத்து மோடியை கேள்வி கேட்கின்றன. ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் முறைகேடு பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குடைச்சல் கொடுத்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடியோ, உங்களது தந்தை ராஜீவ்காந்தி ஊழல்வாதிகளில் நம்பர் 1-ஆகவே மடிந்து போனவர் என்றார். அத்துடன் நாட்டின் போர்க்கப்பலை குடும்ப உல்லாசத்துக்கு ஏதோ தனியார் டாக்சி போல பயன்படுத்தினார் ராஜீவ் காந்தி எனவும் அதிரடி காட்டினார்.
இதனைத் தொடர்ந்து போர்க்கப்பலை ராஜீவ் காந்தி பயன்படுத்தினாரா? இல்லையா? என அனைத்து தரப்பிலும் விவாதம் களைகட்டுகிறது. மேடைகளில் தேசியவாதம், தேசப்பற்று என பேசுவதும் பேசி முடிக்கும் போது பாதுகாப்புத் துறையை களங்கப்படுத்தும் வகையில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் எவ்வளவு பெரிய அவமானம்? என்பதை அரசியல்வாதிகள் உணருவதாகவே இல்லை என்பதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் ஆதங்கம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications