எல்லையில் பதற்றம்.. 12 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் சமரச பேச்சுவார்த்தை.. சுமூகம் எட்டவில்லை?
டெல்லி: எல்லையில் பதற்றத்தை தணிக்க கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை 12 மணி நேரத்தை கடந்து நீடித்து வருகிறது என்றும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு லடாக் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று 3ஆவது கட்டமாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நேற்று காலை 11 மணிக்கு சுச்சூல் பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்ட்னினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் தெற்கு ஜின்ஜியாங் ராணுவத்தின் தலைமை மேஜர் லியூ லின் ஆகியோர் இருந்தனர்.
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை 12 மணி நேரத்தை கடந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும் இதில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பேச்சுவார்த்தை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் கால்வன் பகுதியில் இந்தியா வசம் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிதாக உரிமை கோருவது குறித்து இந்திய தரப்பு கவலை தெரிவித்தது.
நிலைமையை மீட்டெடுக்க கால்வன் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரி மற்றும் பல பகுதிகளில் உள்ள சீன துருப்புகளை திரும்ப பெற வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த பேச்சுவார்த்தை 12 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதை பார்க்கும்போது பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது.
ஏற்கெனவே மால்டோ பகுதியில் ஜூன் 6 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை சுச்சூல் பகுதியில் முதல்முறையாக நேற்று நடைபெற்றது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications